width:450px height:299px கீரைகள்

புளிச்சக்கீரை சாகுபடி




புளிச்சக்கீரையில் வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்புபூ புளிச்சை என இரு வகை உள்ளது.சிவப்புபூ புளிச்சைகீரையானது, வெள்ளைப்பூ புளிச்சைக்கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

புளிச்சக்கீரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிளும் விலைகின்ற மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கீரையாகும்.

வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும் இயல்பை உடையது.

 

இரகங்கள்

செம்புளிச்சக்கீரை, கரும்புளிச்சக்கீரை ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.

விதையளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

விதைகளை தயார் செய்துள்ள பார்களின் பக்கவாட்டில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10-15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வப்போது களைகளை நீக்கி நிலத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்

பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

இக்கீரையை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கீரைகளை முற்றி விடாமல் அறுவடை செய்ய வேண்டும்.




தற்போதைய செய்திகள்