சம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும்
. ஒரு டன் தொழுவுரத்தைச் சலித்து, அதனுடன் 150 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து நிழலான இடத்தில் குவித்து வைத்திருந்து அதை ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் தூவி ஒரு உழவு செய்ய வேண்டும். இரண்டு அடி இடைவெளியில், மூன்றரை அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்.
நிலத்தின் அமைப்பைப் பொறுத்து பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியின் இரண்டு ஓரங்களிலிருந்தும் அரையடி உள்ளே தள்ளி, செடிக்குச் செடி ஒன்றே முக்கால் அடி இடைவெளி விட்டு.
. பீஜாமிர்தத்தில் விதிநேர்த்தி செய்யப்பட்ட சம்பங்கி விதைக்கிழங்கை லேசாகப் பள்ளம் பறித்து நடவு செய்ய வேண்டும் (50 லிட்டர் பீஜாமிர்தக் கலவையில் 250 கிலோ விதை கிழங்கை அரை மணி நேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்). ஏக்கருக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை விதைக்கிழங்குகள் தேவைப்படும்.
சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டியது .
பருவம்
சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும்.
இரகங்கள் :
மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.
25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும். 45 செ.மீ. இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.
ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், ஏக்கருக்கு 20 கி.கி. தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி. மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கி.கி. சாம்பல் சத்து தரவல்ல 135 கிலோ முரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
நூற்புழு தாக்குதல் சம்பங்கியில் பிரச்னை தரும் ஒன்று. பகுப்பாய்வு மூலம் நூற்புழு தாக்குதலை உறுதி செய்துகொண்டு, அதனைக் கட்டுப்படுத்த செடிக்கு ஒரு கிராம் வீதம் கார்போ பியூரான் குருணை மருந்தை வேர்மண்டலத்திற்கு அருகில் வைத்து நீர் பாய்ச்சவும்.
இது இரண்டாண்டுப் பயிர். நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் மேலும் ஓராண்டு பலன் தரும். தினசரி மலர் பறிக்க வேண்டும். ஏக்கருக்கு ஆண்டுக்கு 6 டன் வரை மகசூல் எடுக்கலாம்.
எனவே, சம்பங்கி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், இந்த முறையான சாகுபடி முறைகளை மேற்கொண்டு நிறைவான மகசூலும், இலாபமும் பெற்றுப் பயனடைய வேண்டும்
