width:1512px height:1080px மேலாண்மை செய்திகள்

கோழி கொண்டை பூ அறுவடை தீவிரம்




கோழி கொண்டை பூ அறுவடை தீவிரமடைந்துள்ளது. தற்போது, நல்ல விலை இருப்பதால விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் அதிகளவில் பூங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் பிரதானமாக சாமந்தி, குண்டுமல்லி, மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான மூக்கனூர், பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிகொண்டை பூக்கள், அறுவடை செய்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால், கோழிகொண்டை பூக்கள் குறைவாகவே வருவதால், விலை அதிகரித்துள்ளது. இங்கு விளையும் கோழிக்கொண்டை பூக்கள், பெங்களூரு, திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். குறைந்த அளவில் பூக்கள் விளைச்சல் இருந்தாலும், கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 




Site For Sale Contact : 9894832938