width:610px height:399px மேலாண்மை செய்திகள்

எள் சாகுபடி..!!




மண்ணின் தன்மை :எள் மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசுல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.

மேலும் அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன.

ரகங்கள் :

கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ (எஸ்.வி) 1, டி.எம்.வி 7 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

நிலத்தைத் தயார் செய்தல் :

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும்.

நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும்.

விதைத்தல் :

ஏக்கருக்கு அரைகிலோ விதைகள் தேவைப்படும். காற்றடிக்கும் போது எள்ளை விதைக்கக் கூடாது.

அப்படி விதைத்தால் மொத்த எள்ளும் ஒரே இடத்தில் போய் விழுந்துவிடும். அரை கிலோ விதை எள்ளுடன், ஒன்றரை கிலோ மிருதுவான மணலை கலந்து தூவலாம் தூவிய உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இல்லையெனில், எள்ளை எறும்பு தின்ன ஆரம்பித்து விடும். அதற்கு பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

பயிர்பாதுகாப்பு :

எள் செடி இரண்டு அங்குலம் வளர்ந்த பிறகு 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை வாய்க்கால் பாசனத்துடன் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும்.

மேலும் 15-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5 நாள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோல 30 முதல் 35-ம் நாளுக்குள் இரண்டாம் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசனம் செய்யும்போது, அதில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும்.

40-ம் நாளுக்கு மேல் இலைச்சுருட்டுப் புழுத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே 40-ம் நாள், 10 லிட்டர் மூலிகைப் புச்சிவிரட்டி தௌpக்க வேண்டும்.

(மூலிகை புச்சிவிரட்டி தயாரிப்பு : ஊமத்தை, வேப்பிலை, ஆடாதொடை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சி, தும்பை இலைகளை மொத்தம் 5 கிலோ எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுச்சிறுநீர் சேர்த்து, பத்து நாட்கள் ஊறவைத்து வடிகட்டி பயன்படுத்தலாம். மூலிகை புச்சிவிரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தௌpக்கலாம்.)

40-ம் நாளுக்கு மேல்  புக்கும் தருணத்தில் ஜீவாமிர்தமும், புச்சிவிரட்டியும் பயன்படுத்துவதால் மகசுல் பாதிக்காது.

அறுவடை :

70-ம் நாள் பயிர், பழுப்பு நிறத்தை அடையும். 90-ம் நாள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அறுவடை செய்த பயிர்களை வயலிலே 2 நாட்கள் பரப்பி வைக்க வேண்டும். பிறகு, தனித்தனியே பிரித்து வெயிலில் காய வைத்தால், எள் மட்டும் தனியே கொட்டிவிடும்.

இதுபோன்று மூன்று, நான்கு முறை செய்தால், அனைத்து எள்ளும் செடியை விட்டு தனியாக வந்துவிடும்.

மகசுல் :

ஒரு எக்டருக்கு 300 கிலோ வரை மகசு+ல் கிடைக்கும்.

ஊடுபயிர் :

ஊடுபயிராக துவரை பயிர் செய்யலாம்.




தற்போதைய செய்திகள்