width:px height:px மேலாண்மை செய்திகள்

கால்நடைகளுக்கான மூலிகை மசால் உருண்டை..!!




மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

இந்த தீவனத்தினால் கால்நடைகளை கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களிடமிருந்தும் பாதுகாக்கலாம்.

மூலிகை மசால் உருண்டை தயாரிக்கும் முறை

அருகம்புல், ஆவாரம் இலை, வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி, சோற்றுக்கற்றாழை, ஆடாதோடா, வாத நாராயணன் இலை, ஓரிதழ் தாமரை, செம்பருத்தி, தும்பை, அழுதாழை, பெரியா நங்கை, சிறியா நங்கை, அமுக்காரா, அம்மாள் பச்சரிசி, வாழைப்பு, வெற்றிலை, பிரண்டை, துத்தி, மாவிலை, வல்லாரை, துளசி, முடக்கறுத்தான், மணத்தக்காளி, புதினா, நெருஞ்சி, நெல்லிக்காய், நுணா, பொன்னாங்கண்ணி, நல்வேளை, நாய்வேளை, பால்பெருக்கி, குப்பைமேனி, கோவை இலை, மொசு மொசுக்கை, கறிவேப்பிலை, கீழாநெல்லி, அகத்தி, சரக்கொன்றை, நிலவேம்பு, வேலிப்பருத்தி, வெட்டிவேர், மருதாணி, வில்வஇலை, விஷ்ணுகிரந்தி, மாதுளம் பழம்

தோல், தவசி முருங்கை, அப்பக்கோவை, அல்லி, தாமரை, அரசு இலை, வேப்பிலை, தூதுவாளை, தொட்டாச்சிணுங்கி, எலுமிச்சை இலை, கொய்யா இலை, ஆல் இலை போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்கலாம்.

மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, புண்டு, அகில், மிளகாய் வற்றல், கிராம்பு, ஜாதிக்காய், கடுக்காய், வெந்தயம், அதிமதுரம், சீரகம், கசகசா, ஓமம், உப்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு, சிறிய வெங்காயம், கொத்தமல்லி விதை, பெருங்காயம், தேங்காய், பனைவெல்லம், ஏலக்காய், மஞ்சள்தூள் ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும். மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் மூலிகைகளைக் கொண்டே இந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம்.

மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.




தற்போதைய செய்திகள்