width:640px height:480px செய்திகள்

மழையால் நிலக்கடலை அறுவடை பாதிப்பு




நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளதால், நிலக்கடை பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 3,000 ஹெக்டர் பரப்பில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். ஐந்து மாத பயிரான நிலக்கடை அறுவடை பணி துவங்கிய நிலையில், பலத்த மழையால், பல்வேறு இடங்களில் இலைபுள்ளி நோய் பயிரை தாக்கியுள்ளது. இதனால் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை நிலக்கடை அறுவடை செய்யப்படும் நிலையில், மழையால் பயிர்கள் அழுகியதால் நான்கு முதல் ஐந்து மூட்டை வரை மட்டுமே நிலக்கடை அறுவடை செய்யப்படுவதாகக் கூறுகின்றனர். இலைபுள்ளி நோய்க்கு மருந்து அடித்தும் நோய்த் தாக்குதல் குறையவில்லை என்றனர் விவசாயிகள். மேலும் உழவு பணி, விதைப்பு, களை எடுப்பு உள்ளிட்ட செலவுகளால் இந்த ஆண்டு உரிய லாபம் கிடைக்கவில்லை என்றனர்.




தற்போதைய செய்திகள்