width:794px height:542px விவசாயம்

வடகிழக்கு பருவமழை- காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன?




வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் விளக்கி உள்ளார்.


தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை காலத்தில் காய்கறி பயிர்கள், பல்லாண்டு பயிர்கள் மற்றும் பசுமை குடில் நிழல்வலை கூடாரம் அமைத்து உள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பட்டுப்போன காய்ந்துபோன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பசுமை குடிலின் கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலை சுற்றி உயிர் வேலி அமைக்க வேண்டும்.

பல்லாண்டு பயிர்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், கொக்கோ போன்றவற்றுக்கு பூஞ்சாண நோய்களை தடுக்க சூடோமோனஸ் தெளிக்க வேண்டும்.

காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றுவதுடன், வாழை, காய்கறிகள், பந்தல் காய்கறிகள், பூக்கள் போன்றவற்றுக்கு நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும்.

 




Site For Sale Contact : 9894832938