width:630px height:411px கால்நடை

செலவைக் குறைக்க உதவும் தீவன பயிர் சாகுபடி- விதை நேர்த்தி முறைகள்!




கால்நடை பராமரிப்பில் 70 சதவீத செலவு தீவனத்திற்கு மட்டுமே போகிறது. எனவே, தீவன பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே பயிரிட்டு தீவன செலவை குறைத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு பயிரிடும் போது, கீழ்கண்ட விதை நேர்த்தி முறைகளை கடைபிடித்தால் விதை உறக்கத்தை நீக்கி, விதைகளின் முனைப்பு திறன் வீரியம் மற்றும் பயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

தீவனச்சோளம்

6 பொட்டலம் அசோபாஸ் (1200கி/எக்டேர்) கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்

தீவன மக்காச்சோளம்

விதைப்பதற்கு முன்னர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் மற்றும் 200 கிராம் கார்பரில் மருந்தை நன்றாக கலந்து விதைக்க வேண்டும்.

நீல கொழுக்கட்டை புல்

அறுவடை செய்த நாளில் இருந்து 6-8 மாதங்கள் விதைகள் உறக்க நிலையில் காணப்படும்.

எனவே விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசிய நைட்ரைட் கலந்து விதைகளை 48 மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைக்க வேண்டும்

வேலி மசால்

விதைகளின் மேலுறை கடினத்தன்மையாக இருப்பதால் விதைகள் விதை உறக்க நிலையில் காணப்படும்.

எனவே விதை உறக்கத்தை போக்க தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 4 நிமிடம் கழித்து வேலி மசால் விதைகளை அந்த கொதிக்க வைத்த நீரில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி அடர் கந்தக அமிலம் ஊற்றி 15 நிமிடம் கிளறி விட வேண்டும் பின்னர் தண்ணீரில் நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

 

முனைவர். ப.வேணுதேவன் மற்றும் மருஆ.சுமித்ரா,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
அருப்புக் கோட்டை




Site For Sale Contact : 9894832938